Monday 19 March 2018

ஜாதிக்காய்

ஜாதிக்காய்


வயிற்றுப் போக்கு குணமாக
-----------------------------------------------------
ஜாதிக்காய் பொடியை (அரைகிராம்) அளவு எடுத்து பாலில் கலந்து தினந்தோறும் மூன்று வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு தீரும் .
ஜாதிக்காய் தூள் (10 கிராம்) அளவு எடுத்து வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.
சீரற்ற இதயத்துடிப்பு சீராக இயங்க
----------------------------------------------------
ஜாதிக்காய் (5 கிராம்) பொடி எடுத்து அதனுடன் புதிதாக நெல்லிக்காய்ச் சாறு அரைத்து ஒரு மேஜைக் கரண்டியளவு எடுத்து இரண்டையும் இரவு வேளை கலந்து சாப்பிட்டு வந்தால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.
முகம் பொலிவாக மாற
-----------------------------------------------------
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் , முகம் பொலிவடையும்.
அம்மை கொப்பளங்கள் மறைய
-----------------------------------------------------
ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து வைத்துக் கொண்டு அம்மை நோயின் போது உணவிற்கு முன் (5 கிராம்) அளவு எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும்.
நாவறட்சி குணமாக
-----------------------------------------------------
ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

No comments:

Post a Comment