Thursday 29 March 2018

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு

மக்கள் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக் கிழங்கு.
இதில் புரதம், இரும்புச் சத்து மற்றும் சிறிதளவு வைட்டமின் சத்துக்களும் உள்ளன. உருளைக் கிழங்கை அதிகம் சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள்ஏற்படும் என்பார்கள். இது உண்மை தான்.

எனவே உருளைக் கிழங்கின் மேல் தோலை நீக்காமல் சமைத்துச் சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.

உருளைக் கிழங்கில் அரிசியில் இருப்பது போன்றே மாவுப் பொருள் இருப்பதால், எஸ்கிமோ என்ற இன மக்கள் முழு உணவாகவே சாப்பிடுகின்றனர்.

இது உடலுக்கு வலிமை தருகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு நன்றாக வேக வைத்து உருளைக் கிழங்கைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் சக்தி உடையது. ஆனால் தோலை நீக்காமல் உருளைக் கிழங்கைப் பயன்படுத்த வேண்டும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்குச் சில நேரங்களில் தாய்ப்பால் சுரப்பது குறையும். அப்போது உருளைக் கிழங்கைச் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

தோலை நீக்கி விட்டுக் கிழங்கைச் சமைப்பதாக இருந்தால், அதனுடன் பூண்டு, இஞ்சி போன்ற பொருள்களைச் சேர்த்துக் கொண்டால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.

இருந்தாலும் வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இந்தக் கிழங்கைச் சாப்பிடவே கூடாது.வயதானவர்கள் அடிக்கடியும், அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.

இக்கிழங்கைத் தண்ணீர் விட்டு அலம்பி இடித்து, அரைத்துக் கட்டிகளின் மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் கட்டி பழுத்து உடையும்.கண்களின் கீழ் கருவளையம் இருந்தால், உருளைக்கிழங்கைச் சாறு எடுத்துத் தடவலாம்.

மேல் தோலைச் சீவி விட்டு, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து ஆறாத புண்கள் மீதும், படை, சொறிகளின் மீதும் பற்றாகப் போட்டால், புண் ஆறி விடும்.

No comments:

Post a Comment