Thursday 29 March 2018

ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ்

ஏ.பி.சி ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் - 1, பீட்ரூட் - 1/4 துண்டு, கேரட் - 1.

செய்முறை: 
ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையும் பொடியாக வெட்டி, மிக்ஸியில் அடித்து ஜூஸாக்க வேண்டும். தேவைப்படுவோர், சிறிது புதினா இலைகளைச் சேர்க்கலாம்.
பலன்கள்

காலை உணவோடு இந்த ஜூஸ் எடுத்துக்கொண்டால், நினைவுத்திறன் அதிகரிக்கும்.

நீண்ட நேரம் கணினி முன் வேலைபார்ப்பதால் ஏற்படும் கண் வறட்சி, கண் சிவத்தல் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீரற்ற ஹார்மோன்களால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

கல்லீரலைச் சுத்தப்படுத்தி, ரத்தத்தைத் தூய்மையாக்கும். ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.  

கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவிபுரியும். வயிற்றுப் புண் வராமல் பாதுகாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

No comments:

Post a Comment