Thursday 22 March 2018

கறிவேப்பிலை

கறிவேப்பிலை




உணவின் வாசனையை அதிகரிக்கத்தான்கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர்கருதுகின்றனர்இதனால் தான் சாப்பிடும்போதுஉணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழேபோட்டு விடுகிறார்கள்ஆனால் இனிமேல் இப்படிச்செய்யாதீர்கள்ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறுமருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள்மூலம் தெரிய வந்துள்ளதுகறிவேப்பிலையின்தாவரப்பெயர் முரையா கோய்னிஜா


      இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தைசேர்ந்ததுகறிவேப்பிலையில் வைட்டமின் பிசி,கால்சியம் போன்றவைகள் உள்ளனமேலும்கறிவேப்பிலையில் கோயினிஜாக்குளுகோசைட்,ஒலியோரெசின்ஆஸ்பர்ஜான் சொரின்ஆஸ்பார்டிக்அமிலம்அயாமைன்புரோலைன் போன்ற அமினோஅமிலங்கள் உள்ளது

      இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறதுபல மருத்துவ குணங்களையும்வெளிப்படுத்துகிறதுஇந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமானகறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில்ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோஎன்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்மசாலாப் பொருட்கள் நல்லவாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம்கண்டறிந்துள்ளதுஇந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்தஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார்இது புற்றுநோய்இதய நோய்களை குறைக்கும்ஆற்றல் கொண்டதுமேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்

               
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல்இருதயம்கண்நோய்களுக்குதலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளதுசாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றைஎடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சிதினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும்பரம்பரை நரை வராதுகண்பார்வைகுறைவு ஏற்படாது

      கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல்இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்டநோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும்கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா?என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர்அதில் கறிவேப்பிலையும்கடுகும் சேர்ந்து நமதுதிசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்ததுமேலும் பிரிரேடிக்கல்ஸ்உருவாவதையும் தடுக்கிறதுபிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.பாதிக்கிறது...

               
செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறதுவிளைவு கேன்சர்வாதநோய்கள் தோன்றுகின்றன.தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும்கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதைதடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலைஇலையையும்மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றைவிழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள்மருத்துவர்கள்

               
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால்உடல் கனமாவது குறைக்கப்படும்சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும்அறிவை பெருக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும்சளியும் குறையும்என்கிறார்கள் மருத்துவர்கள்இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளைசாப்பிட சிபாரிசு செய்கிறது

75 - 125 
கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறதுஅதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment