Monday 26 March 2018

கொத்துமல்லி

கொத்துமல்லி 


மருத்துவப்பயன்கள் :- 

சிறுநீர் பெருக்கி, அகட்டு வாய்வகற்றி, ஊக்கமூட்டி, உரமாக்கு, நறுமணமூட்டி. தீர்க்கும் நோய்கள்- காச்சல், மூன்று தோசங்கள், நாவரட்சி, எரிச்சல், வாந்தி, இழுப்பு, மூலநோய், இதயபலவீனம், மயக்கம், இரத்தக்கழிசல், செரியாமை, வயிற்றுப் போக்கு, நெச்செரிச்சல், வாய்க்குளரல், சுவையின்மை, தலைநோய், உட்சூடு, குளிர்காச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தொண்டைக்கட்டு, வரட்டு இருமல், கல்லீரல் பலப்படுத்த, இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம்,  பயித்தியம், வாந்தி, விக்கல், தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்சுவலி, கட்டி வீக்கம், கண்ணில் நீர் வடிதல், கண் சூடு, பார்வை மந்தம், இடுப்பு வலி, சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய் கோணல், ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.

கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்ச்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்துமல்லியைச் சிறிது காடியில் அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும். புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

கொத்துமல்லி விதை 100 கிராம், நெல்லி வற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் பொடி செய்து அதில் 200 கிராம் சர்கரை கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரத் தலைச் சுற்றல், நெஞ்செரிவு, வாய்நீரூரல், சுவையின்மை ஆகியவை தீரும்.

கொத்துமல்லி 300 கிராம் சீரகம், அதமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இளவறுப்பாய் வறுத்துப் பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக் கற்கண்டுப் பொடி கலந்து (கொத்துமல்லி சூரணம்) காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உட்சூடு, குளிர்காச்சல், பயித்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி ஆகியவை தீரும். நீடித்துக் கொடுத்துவரப் பலவாறான தலை நோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்க்குளரல் ஆகியவை தீரும். மனவலிமை மிகும்.

கொத்துமல்லி இலை, சிரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்த கிறுகிறுப்பு நீங்கும்.

கொத்துமல்லி கார்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பசித்தூண்டியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கொத்துமல்லி இலை, கீரையாகவும் பயன்படுகின்றது. இதனால் பித்தக் காய்ச்சலும் பித்த மயக்கமும் நீங்கும்.கொத்துமல்லி உடலுக்கு உறுதியை ஏற்படுத்தும். ஆண்மையைப் பெருக்கவும் இது உதவுகின்றது. மேலும், தொடர்ந்து கொத்துமல்லிக் கீரையை உண்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும் கொத்துமல்லி மண்டைச்சூடைக் குறைப்பதுடன், ஆழ்ந்த தூக்கமும் உண்டாக்கும். கொத்தமல்லி இலையைத் துவையல் தயாரித்தும் சாப்பிடலாம்.
கொத்துமல்லி விதை வாசனைப் பொருளாகவும் பயன்படும். கொத்துமல்லி                 விதைஎண்ணெய் வயிற்றுப் பொருமல், செரியாமை, கழிச்சல் இவைகளுக்குப் பயன்படுகின்றது. மேலும், வாசனைத் தைலங்களிலும் சேர்க்கப்படுகின்றது.
கொத்துமல்லி 20 செ.மீ. வரை வளரும் சிறுசெடி. இலைகள், மூவிலை அமைப்பில் மடலானவை. மடல்கள், அகன்ற முட்டை வடிவமானவை.  பூக்கள், சிறியவை, வெண்மையானவை, தொகுப்பானவை. கொத்துமல்லி காய்கள் கோள வடிவமானவை, வரிகளுடன் உள்ள‌வை. முதிர்ந்து, 2 அரை வட்டமான பகுதிகளாக உடைகின்றன.
கொத்துமல்லி இந்தியா முழுவதும் பயிராகின்றது. பயிர் நிலங்களிலிருந்து எழும்பும் கொத்துமல்லி மணத்தை வெகு தொலைவிலிருந்தும் உணர முடியும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.
பச்சையான கொத்துமல்லி தாவரம் காய்கறி அங்காடிகளிலும், காய்ந்த கொத்துமல்லி விதைகள் மளிகைக் கடை, நாட்டுமருந்துக் கடைகளிலும் கிடைக்கும். காய்ந்த விதைகளுக்கு, தனியா, உருள் அரிசி போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு.
பல்வலி, ஈறுவீக்கம், வாய்துர்நாற்றம் குணமாக கொத்துமல்லி இலைகளை வாயில் இட்டு மெல்ல வேண்டும். வாய் துர்நாற்றம் சரியாக கொத்துமல்லி விதைகளை வாயிலிட்டும் மெல்லலாம். அல்லது கொத்துமல்லி விதைக் குடிநீர் செய்து வாய் கொப்பளித்தும் வரலாம்.
கொத்துமல்லி இலைகளை நல்லெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
1தேக்கரண்டி அளவு கொத்துமல்லி விதைகளை சிறிதளவு காடியில் அரைத்து உள்ளுக்கு கொடுக்க போதை நீங்கும்.
2 தேக்கரண்டி கொத்துமல்லி விதைகளை நன்கு நசுக்கி ½ லிட்டர் நீரில் விட்டு 200 மிலியாக காய்ச்சி வடிகட்டி 1 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். காலை, மாலை இரு வேளைகள், 3 நாட்கள் சாப்பிட இரத்தக் கழிச்சல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி குணமாகும்.
அம்மை நோயின் போது கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க, ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி விதைகளைக் கழுவி ½ லிட்டர் நீரில் போட்டு 3 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, அந்த நீரில் கண்களைக் கழுவ வேண்டும் தொடர்ந்து ஒரு நாளைக்கு 4 முறைகள் இவ்வாறு செய்யலாம்.
கொத்துமல்லி விதை ¼ கிலோ, சீரகம், அதிமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, சதகுப்பை ஆகியவை ஒவ்வொன்றும் 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் இளவறுப்பாக வறுத்து பொடியாக்கி சலித்து ½ கிலோ வெள்ளை கற்கண்டுப் பொடி சேர்த்து கலந்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் காலை, மாலை ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீருடன் சாப்பிட்டு வர விக்கல், நாவறட்சி, நெஞ்செரிச்சல் தீரும்.

No comments:

Post a Comment