Thursday 22 March 2018

சித்த மருத்துவக் குறிப்புகள்


சித்த மருத்துவக் குறிப்புகள்

1.நெஞ்சு சளி: [NENJU JALI]
 தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆரவைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2.தலைவலி: [THALAI VALI]
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்சேர்த்து நன்கு அரைத்துநெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3.தொண்டை கரகரப்பு: [THONDAI KARAKARPU]          சுக்குபால் மிளகுதிப்பிலிஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்துசாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4.தொடர் விக்கல்: [VIKKAL]      நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்துதேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்...

5.வாய் நாற்றம்: [VAI NATTRAM]         சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளைவாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6.உதட்டு வெடிப்பு: [UTHADU VEDIPPU]
      கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கிஅதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவிவர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7.அஜீரணம்: [AJIRANAM]       ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலைஇஞ்சிசீரகம்மூன்றையும் கொதிக்க வைத்துஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்..

8.குடல்புண்:[KUDAL PUN]    மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும்மஞ்சள் கரி சாம்பலை தேன்கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9.வாயு தொல்லை: [VAYU THOLLAI]        வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும்.ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10.வயிற்று வலி: [STOMATCH PAIN]
 வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11.மலச்சிக்கல்: [MALA SIKKAL]    செம்பருத்தி இலைகளை தூள் செய்துதினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12.சீதபேதி: [SEETHA PETHI]
 மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13.பித்த வெடிப்பு: [PITHA VEDIPPU]     கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்புகுணமாகும்.

14.மூச்சுப்பிடிப்பு:[MUCHU PIDIPPU]           சூடம்சுக்குசாம்பிராணிபெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்தகஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால்குணமாகும்.

15.சரும நோய்: [SKIN PROBLEM]        கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாகஉடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16.தேமல்: [THEMAL]       வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வரதேமல் குணமாகும்..

17.மூலம்: [MOOLAM - PILES]      கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்துசாம்பாராக செய்துசாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18.தீப்புண்: [THEE PUN]        வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண்,சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19.மூக்கடைப்பு: [MUKKADAIPPU]        ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சிபால்சர்க்கரைசேர்த்துக் காலைமாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20.வரட்டு இருமல்: [VARATTU IRUMAL]
எலுமிச்சம் பழசாறுதேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.


No comments:

Post a Comment