Thursday 29 March 2018

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு


உலகெங்கும் விளையும் பயிர்களில் அதிகளவில் விளைந்து ஏழாவது முக்கிய உணவுப் பொருளாகத் திகழ்கிறது. வேர்ப் பகுதிகளில் விளையும் இந்த கிழங்கு பெரிதாக, அடர்த்தியாக பல நல்ல சத்துக்கள் நிறைந்து விளங்குகிறது. இதைத் தோலுடன் சாப்பிட்டால்தான், நார்ச்சத்து நிறையக் கிடைக்கும். ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘ஏ’ சத்தைப் போல் இரண்டு மடங்கு ஒரு கிழங்கைச் சாப்பிடுவதிலேயே கிடைக்கும். அத்துடன் தேவையான வைட்டமின் ‘சி’ அளவில் பாதியும் கிடைக்கிறது. படரும் கொடியாக உள்ள இந்தச் செடியின் இலைகள் சுருண்டிருக்கும். வளரும் இடத்தின் தட்ப வெப்பநிலை, விளையும் மண்ணில் உள்ள தாதுப்பொருட்களுக்கேற்ப, இந்தக் கிழங்கு சிகப்பு, ஆழ்ந்த நீலம், வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாகக்கூட இருக்கும். 


தோல் நோய்களுக்கு மருந்தாவதும், கண்களுக்கு நல்ல பார்வையை கொடுக்க கூடியதுமான மரவள்ளி கிழங்கு, உடலுக்கு பலம் தரக்கூடியதும், தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியதுமான சர்க்கரை வள்ளி கிழங்கின் பயன்களை அறிவோம்.
மரவள்ளி கிழங்கிற்கு ஏழிலை கிழங்கு என்ற பெயர் உள்ளது. ஏழு இதழ்களை பெற்று இருப்பதால் அந்த பெயரை பெற்றுள்ளது. மரவள்ளி கிழங்கு ஏழைகளின் உணவு. சரிவிகித உணவான இதில், வைட்டமின் ஏ சத்து மிகுந்து காணப்படுகிறது. மரவள்ளி கிழங்கு கண்களுக்கு தெளிவான பார்வையை தரும் தன்மை கொண்டது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. உடலுக்கு ஊட்டசத்தாகிறது.
மரவள்ளி கிழங்கின் இலை விஷக்கடிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. இலையை பசையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதை தேள், பூச்சி கடிவாயில் வைத்து கட்டுவதால் விஷம் முறியும். வலி, வீக்கம் குறையும். மரவள்ளி கிழங்கை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். மரவள்ளி கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
அதில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஞ்சி போன்று தயாரிக்க வேண்டும். கஞ்சியை ஆற வைத்து அரிப்பு இருக்கும் இடத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து அதை துடைத்து விடலாம். இவ்வாறு செய்தால் அரிப்பு, தடிப்பு சரியாகும். மரவள்ளி கிழங்கு புரதச்சத்தை மிகுதியாக கொண்டுள்ளது. மாவுச்சத்தை அதிகம் பெற்றுள்ளது. இதில் வைட்டமின் ஏ,பி உள்ளது. கண்களுக்கு மருந்தாகிறது. எலும்புக்கு பலத்தை தருகிறது. உடல் எடையை கூட்டும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். சிறுநீரை பெருக்கும். பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.
சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். சர்க்கரை வள்ளி கிழங்கு இலைகளை பயன்படுத்தி தொழுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 5 இலைகளுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிக்கலாம். இதன் இலையை பற்றாக போட்டால் புண்கள் ஆறும். சர்க்கரை வள்ளி கிழங்கில் இருந்து குளுக்கோஸ் தயாரிக்கப்படுகிறது. இது நல்ல உணவாகிறது. இலைகள், கிழங்குகள் தோல்நோய்க்கு மருந்தாகிறது. தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியது.
சர்க்கரை வள்ளி கிழங்கை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் உணவு தயாரிக்கலாம். வேகவைத்த கிழங்கு, தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய், நெய் எடுத்துக்கொள்ளவும்.சர்க்கரை வள்ளி கிழங்குடன், சிறிது ஏலக்காய் பொடி, வெல்லம் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் எடுத்து கொண்டு அதை உருக்கவும். அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். இதனுடன் சர்க்கரை வள்ளி கிழங்கு கலவையை சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். போலி, கொலுக்கட்டை போன்றவற்றுக்கு பூரணமாகவும் பயன்படுத்தலாம்.. வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கின் இனிப்பு சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கிழங்கு உடலுக்கு பலம் தரக் கூடியது.


இந்த கிழங்கின் மிக முக்கியமான சிறப்பு என்ன? மற்ற எந்தக் காய்கறிகளுக்கும் இருக்கும் சக்தியைப் போல் மூன்று மடங்கு சக்தியுடன், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக விளங்குகிறது. இந்த வீரியமுள்ள சக்தி எந்த நிறத்தில் உள்ள சக்கரை வள்ளிக் கிழங்குக்கும் பொருந்தும். ஓட்மில் என்ற உணவுப் பொருளே மிக அதிக அளவு நார்ச் சத்தைக்கொண்டது. 

அதையும்விட அதிக அளவு நார்ச்சத்து இந்தக் கிழங்கில் உண்டு. ஆனால், இதைத் தோலுடன் சாப்பிட்டால்தான், நார்ச்சத்து நிறையக் கிடைக்கும். ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘ஏ’ சத்தைப் போல் இரண்டு மடங்கு ஒரு கிழங்கைச் சாப்பிடுவதிலேயே கிடைக்கும். அத்துடன் தேவையான வைட்டமின் ‘சி’ அளவில் பாதியும் கிடைக்கிறது. பீடாகரோடினும் நிறைந்துள்ள இந்தக் கிழங்கை வேக வைத்து உண்பதால் நம் உடலில் சேர்வது 150 கலோரிகளே! வைட்டமின்கள் மட்டுமல்லாது மாங்கனீஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும் இதில் உள்ளன. இந்தக் கிழங்கில் தேங்கிக்கிடக்கும் புரதச்சத்துதான் ‘ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்’ சக்தி உடையது. மற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது சில நச்சுப்பொருட்கள் உடலில் தேங்கிவிட வாய்ப்பு உண்டு. அந்த நச்சுப் பொருட்களை இந்தப் புரதச் சத்து உடலிலிருந்து அடியுடன் நீக்குகிறது. சர்க்கரை வள்ளிக் கிழங்குக்கு ஓர் அபூர்வ சக்தி உண்டு. சிலர் அவர்களது வயதுக்கு மீறி முதுமையானவராகத் தெரிவர். இவர்களின் இந்தக் குறை நீங்க, இந்த கிழங்கு ஒரு வரப் பிரசாதம். இந்தக் கிழங்கில் உள்ள வைட்டமின் பி6 சத்து இருதயத்துக்கு நல்ல டானிக். புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் சுவாசப் பாதிப்பைக்கூட இந்தக் கிழங்கு நீக்குகிறது. சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்ற பெயர் இருப்பதால், இதனைச் சாப்பிட நீரிழிவு நோயாளிகள் அஞ்சுகிறார்கள். ஆனால் இந்தக் கிழங்கில் ஓர் அற்புதக் குணம் உண்டு. இதைச் சாப்பிடுவோர்க்கு உடலில் இன்சுலின் சீராகச் சுரக்கவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைக்கவும் உதவும். இதில் உள்ள நார்ச்சத்து உணவில் உள்ள க்ளுகோஸினை ரத்தத்தில் சேர்க்கும் வேகத்தை வெகுவாகக் குறைக்கிறது. அதற்காக, நீரிழிவு நோயாளிகள் இதனை நன்றாகச் சாப்பிடலாம் என்று பொருள் இல்லை. உணவில் சாதம் அல்லது மாவுச் சத்து நிறைந்த பொருள் ஏதும் இருந்தால், அதற்குப் பதிலாக ஒரு கிழங்கை வேகவைத்துச் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த இந்தக் கிழங்கு, வயிற்றுக்கு சிறந்த நண்பன். இத்தனை குணங்கள் நிறைந்த இதனை வேகவைத்து குழந்தைகள் மட்டுமல்ல, அனைத்து வயதினரும் சாப்பிடலாம்!


No comments:

Post a Comment