Saturday 24 March 2018

அதிமதுரம்

அதிமதுரம்



மூலிகையன் பெயர் –: அதிமதுரம்.

தாவரவியல் பெயர் –: GLYCYRRAIZA GLABRA.

தாவரக்குடும்பம் –: FABACEAE.

பயன் தரும் பாகங்கள் –: இலை மற்றும் உரித்த வேர்கள்.

வேறு பெயர்கள் –: அதிங்கம், அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதூரம். போன்றவை.

வளரியல்பு –: அதிமதுரம் ஒரு வகை செடியைச் சேர்ந்தது. காடுகளில் புதர் செடியாக வளரும். அதற்கு மித சீதோஸ்ணமான கால நிலை வேண்டும். வளமா மண்ணில் நன்கு வளரும். ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளில் பயிர்களுக்கு இடையே களையாக வளரும். இது சுமார் 1.5 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலைகள் கூட்டிலையைக் கொண்டது.  ஊதா நிரமான சிறு பூக்கள் தண்டின் கணைக்களில் காணப்படும். காய்கள் 3 செ.மீ.நீளமானவை. சிறு முட்களும் காணப்படும். வேர்கள் சிறிது பெரிதுமாக இருக்கம். உடபுரம் மஞ்சள் நிறமாகவும் வெளிப்புரம் பழுப்பு நிறமாகக் காணப்படும்.  இதில் அதிகம் மருத்துவத்திற்குப் பயன்படுவது வேர்களே. இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், இமாச்ச்சில், உத்திரப்பரதேசம் போன்ற மாநிலத்தில் வணிக ரீதியாகப் பயிரிடுகிறார்கள். அதிமதுரம் நாட்டுமருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும். இது விதை மூலம் இன விருத்தி செய்யப் படுகிறது.

 அதிமதுரத்தின் மருத்துவப் பயன்கள் –: 

இது பித்தம், வாதம், இரத்த தோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சி போக்கி  இலைகள் இனிப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டவை. வேர்கள் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. வேர்புண்கள்தாகம்அசதிகண் நோய்கள்விக்கல்எலும்பு நோய்கள்மஞ்சல் காமாலைஇருமல்தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். காக்கை வலிப்புமூக்கிலிருந்து இரத்தம் வடிதல்படர்தாமரை ஆகியவற்றை கட்டுப்படுத்தும். முடியை வளர்க்கும் பண்பும்ஆண்மையை பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு.

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்:-
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும்.அதிமதுரத்தின்  மருத்துவ குணங்கள் அனைத்தும்உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும்பயன்படுத்தப்படுகிறதுஅதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும் மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறதுமலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க
ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும்சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும்சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும்கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க
அதிமதுரம்கடுக்காய்மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்துசூரணம் செய்து வைத்துக் கொண்டு கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால்அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க
அதிமதுரம்சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க
அதிமதுரம்சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்திவைத்துக் கொண்டுபசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால்மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும்.புளியில்லா  பத்தியம் இருக்க வேண்டும்.   சுகப்பிரசவத்திற்கு
அதிமதுரம்தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்துபிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்துபிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு1_2 கிராம் அளவில் தேனில் குழைத்துதினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டுஇருமல்சளிகுணமாகும்இதைச் சாப்பிட்டு  வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும்.  உடல் பலமும்ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க
அதிமதுரம்ரோஜா மொக்குசோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டுஇரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்துசாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காதுஇலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக
சோம்புச்சூரணம்அதிமதுரச் சூரணம் தலா கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால்இலகுவாக மல விருத்தியாகும்உள்உறுப்புக்கள் சூடுதணிந்துசுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க
அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து3_4 வேளை சாப்பிட்டால்வாந்தியுடன் இரத்தம் வருதல்நிற்கும்… உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக….
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்தாய்ப்பால்அதிகமாகச் சுரக்கும்இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க
அதிமதுரம்வாதுமைப் பிசின்வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும்தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டுஇரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால்வரட்டு இருமல் தீரும்கோழையுடன் உள்ள இருமலும் தீரும்.தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்இளநரை ஏற்படாமல் தடுக்கும்தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க….
அதிமதுரம்அரிசித்திப்பிலிசித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டுஇதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம்ஆடா தொடை இலை பத்து கிராம்இவைகளை200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டிகாலைஇரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால்நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும்இருமல் நின்று விடும்.ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும்.இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகசளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க
அதிமதுரம்வால்மிளகுசித்தரத்தைதிப்பிலி ஆகியவை வகைக்கு கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலைமாலை இருவேளை 30மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர
அதிமதுரம் 15 கிராம்சீரகம் 15 கிராம்வெங்காயம் 20 கிராம்சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும்மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்புபுளி சேர்க்காமல் பத்தியம் இருக்கவேண்டும்.

தாது விருத்திக்கு
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்தாது விருத்தி உண்டாகும்போக சக்தி அதிகரிக்கும்போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்
அதிமதுரம்திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கியநாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால்,ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும்.கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வழுக்கை நீங்கி முடி வளர
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்துஅம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்துதேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும்தலையில் உள்ள பொட்டுபொடுகுசுண்டு முதலியவை நீங்கஇதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க
அதிமதுரம்சோம்புசர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்துதனித்தனியாக நன்கு சூரணம் செய்துபின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும்தலைவலிதீராத தலைவலிஒற்றைத் தலைவலி தீரும்.அதிமதுரம்கடுக்காய்தான்றிக்காய்நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்துஅரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும்.இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும்இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்குரல் கம்மல் நீங்கி விடும்… தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த
பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால்ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம்சளிஇருமல் இருக்காது.தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும் 

No comments:

Post a Comment