Thursday 29 March 2018

பானகம்

பானகம்
வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இதைப் பானகம், பானகரம், பானக்கரம் என்றும் சொல்வார்கள். கிராமப்புறங்களில் இது பிரபலம். குறிப்பாக, கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாகப் பானம் என்றால் மிகையாகாது. 
பானகம் 
இனிப்பும், புளிப்பும் கலந்த இந்தப் பானகம், கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, அவர்களுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தி, அவர்களது பக்தி பரவசத்துக்குத் துணை புரியும். இதனால்தானோ என்னவோ, இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் உட்கொள்ளும் ஒரு பானமாகவே மாறி விட்டது. மற்ற நாட்களில் நாம் இதை மறந்து விடுகிறோம். 
பானகம் என்பது வெறும் ஆற்றல் தரும் பானமாக மட்டுமல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, இது ஆயுர்வேதத்தில் குளுக்கோஸுக்கு நிகரான ஒன்று என்பதோடு, ஏராளமான ஆரோக்கியப் பலன்களையும் தரக்கூடியது என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். மேலும், ஆயுர்வேதத்தில் அதன் பங்கு என்ன என்பது குறித்தும் விவரிக்கிறார். 
பானகம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவை மிகுந்தும், காரம் குறைவாகவும் சேர்க்கப்பட்ட ஒரு பானம். ஆயுர்வேதத்தில் இது, 'பானக கல்பனா' என்று சொல்லப்படுகிறது. 'கல்பனா' என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஆயுர்வேதத்தில் உடனடி நிவாரணம் தரும் மருந்து தயாரிப்பு முறைகளில் இதுவும் ஒன்று. அதாவது, சில மருந்துகளைச் சாப்பிட்டால் முதலில் ஜீரணமாகும். அதன்பிறகு ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்துப் பின், அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும். இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பானகம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும் மருந்தாகும். இதனால்தான் இதைக் குடித்ததும் உடனடி ஆற்றல் கிடைக்கிறது. எனவே, இதை மருத்துவத்தில் உள்ள குளுக்கோஸுக்கு முன்னோடியாகச் சொல்லாம். 
இதன் மகத்துவம் தெரிந்தால், நம் முன்னோர் திருவிழாக்காலங்களில் பக்தி பரவசநிலையில் செய்யும் நேர்த்திக்கடன் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷனுக்குத் தீர்வாக இந்தப் பானகம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது. ஆயுர்வேதத்தில் எலுமிச்சை, புளி, அன்னாசி, மாதுளை பானகம் எனப் பல வகைப் பானகங்கள் உள்ளன. ஆனால், எலுமிச்சை, புளி கலந்த பானகம்தான் மக்களிடையே பிரபலமாக உள்ளது. 
பொதுவாக, பானகம் தயாரிப்பில் பழச்சாறுதான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புளி, பேரீச்சம்பழம் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். இதை மிதமான சூட்டில் சூடுபடுத்தியும் பயன்படுத்தலாம். 
எலுமிச்சை பானகம்
ஜம்பீர பானகம்: 
தேவையான பொருள்கள்: 
எலுமிச்சைச் சாறு - ஒரு பழம் 
வெல்லம்- ஒரு பங்கு 
தண்ணீர் - 16 மடங்கு 
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை 
சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை 
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை 
செய்முறை: 
வெல்லத்தைத் தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். வெல்லம் முழுமையாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகலாம். 
மருத்துவப் பயன்கள்: 
பசியின்மை, உடல் சோர்வை போக்கும். தொண்டைக்கு இதமளித்து, தொண்டை கரகரப்பை சரியாக்கும். 

ஜிஞ்சா பானகம்ஜிஞ்சா பானகம் 
தேவையான பொருள்கள் 
புளி - 100 கிராம் 
தண்ணீர் - 400 மி.லி 
வெல்லம் - 200 கிராம் 
உப்பு - தேவையான அளவு 
சுக்குப்பொடி - சிறிதளவு 
மிளகுத்தூள் - சிறிதளவு 
செய்முறை 
முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த புளியுடன் வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்து பருகலாம். பானகம் செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மண்பானைத் தண்ணீராக இருந்தால் நல்லது. 

பனங்கல்கண்டு - துளசி பானகம்

பனங்கல்கண்டு - துளசி பானகம்


தேவையானவை: பனங்கல்கண்டு - 25 கிராம், நீர் - 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஐஸ்கட்டிகள் - 2, துளசி - 20 இலைகள், மிளகு - 4, ஜாதிக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: மிளகை துளசியுடன் சேர்த்து, கால் கப் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு விழுதாக்கி வடிகட்டவும். பனங் கல்கண்டை பொடித்து முக்கால் கப் நீருடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வடிகட்டிய துளசி ரசம், ஐஸ்கட்டிகள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும். சுவையான இந்த பானம், வெயில் கால ஜலதோஷத்துக்கு சரியான மருந்தும்கூட!

வெல்லம் - சுக்கு பானகம்

வெல்லம் - சுக்கு பானகம்


தேவையானவை: பொடித்த வெல்லம் - 50 கிராம், சுக்குப்பொடி - 2 சிட்டிகை,  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் - 3.
செய்முறை: வெல்லத்தில் முக்கால் கப் நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, வடிகட்டி ஆறவிடவும். இதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டிகள் மற்றும் முக்கால் கப் நீர் சேர்த்துக் கலந்து அருந்தவும்.

பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

சரும பொலிவுக்கு பப்பாளி - ஆரஞ்சு ஜூஸ்
தேவையான பொருட்கள் :
பப்பாளி பழ துண்டுகள்  – 1 கப்
ஆரஞ்சு  – 1
வாழைப்பழம் – 3 துண்டு
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – சிட்டிகை
தேன்- தேவையான அளவு
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை :
* ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
* மிக்சியில் ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை சாறு, பப்பாளி பழத்துண்டுகள், வாழைப்பழம், உப்பு, தேன், ஐஸ்கட்டி சேர்த்து மிக்ஸியில் இட்டு அடித்துக் கொள்ளவும்.
* அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி மிளகுத்தூள் தூவி பருகலாம்.
* பப்பாளி ஆரஞ்சு ஜூஸ் ரெடி!

பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.
இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.
இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

#1 :
அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.
#2:
உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.
#3:
உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.
#4:
தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.
#5:
தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.
#6:
சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.
#7 :
உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.
#8:
2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.
இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.

திரிபலா பானம்

திரிபலா பானம்


டுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் வைரஸ் கிருமிக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டவை.  கடுக்காயை ‘மருத்துகளின் அரசன்’ என்று சொல்வார்கள். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. தான்றிக்காயில் கால்சியம் அதிகம் உள்ளது. இந்த மூன்றையும் ‘திரிபலா’ என்று சொல்வர். இவை மலக்குடலை சுத்தம் செய்யக்கூடியவை.

திரிபலா பானம்!

தேவையானவை: கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (பொடி) - தலா 5 கிராம்,  பனை வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை: 150 மி.லி தண்ணீரில், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்ப் பொடிகளைப் போட்டு,  பனை வெல்லம் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். தூங்கச் செல்லும் முன், இந்த பானத்தை வடிகட்டி, இளஞ்சூடாக அருந்திவர வேண்டும்.
பலன்கள் நோய்களின் வாசலாக இருப்பது மலச்சிக்கல். இந்த பானத்தைத் தினமும் குடித்துவர, மலக்குடல் சுத்தமாகும். மலச்சிக்கலைப் போக்கும்.மலச்சிக்கல் பிரச்னை விலகினாலே, நோய்கள் நம்மை நெருங்காது.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.உடல் முழுவதும் உள்ள நச்சுக்கள் நீங்கும்.வாயுப் பிரச்னைகள், வாயுவால் ஏற்படக்கூடிய உடல்நலக் கோளாறுகள் வராமல் தடுக்கப்படும்.செரிமான மண்டல உறுப்புக்களைப் பாதுகாக்கும்.கல்லீரலைச் சுத்தம் செய்யும். கெட்ட கொழுப்பை நீக்கும்.ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதயம் சிறப்பாகச் செயல்பட உதவும்.சிறுநீர்த் தொற்று, சுவாசக்குழாயில் அடைத்திருக்கும் சளி போன்ற பிரச்னைகள் குணமாகும்.மலக்குடலுக்கு ஏற்ற உணவுகள்மலக்குடலுக்கு ஏற்ற உணவுகள்... வாழை, அவரைக்காய், வெண்டைக்காய், பிளாக்ஸ் விதைகள், பீன்ஸ், வெந்தயம், நீர்மோர், திராட்சை, அத்தி, வெந்நீர்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு


உலகெங்கும் விளையும் பயிர்களில் அதிகளவில் விளைந்து ஏழாவது முக்கிய உணவுப் பொருளாகத் திகழ்கிறது. வேர்ப் பகுதிகளில் விளையும் இந்த கிழங்கு பெரிதாக, அடர்த்தியாக பல நல்ல சத்துக்கள் நிறைந்து விளங்குகிறது. இதைத் தோலுடன் சாப்பிட்டால்தான், நார்ச்சத்து நிறையக் கிடைக்கும். ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘ஏ’ சத்தைப் போல் இரண்டு மடங்கு ஒரு கிழங்கைச் சாப்பிடுவதிலேயே கிடைக்கும். அத்துடன் தேவையான வைட்டமின் ‘சி’ அளவில் பாதியும் கிடைக்கிறது. படரும் கொடியாக உள்ள இந்தச் செடியின் இலைகள் சுருண்டிருக்கும். வளரும் இடத்தின் தட்ப வெப்பநிலை, விளையும் மண்ணில் உள்ள தாதுப்பொருட்களுக்கேற்ப, இந்தக் கிழங்கு சிகப்பு, ஆழ்ந்த நீலம், வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாகக்கூட இருக்கும். 


தோல் நோய்களுக்கு மருந்தாவதும், கண்களுக்கு நல்ல பார்வையை கொடுக்க கூடியதுமான மரவள்ளி கிழங்கு, உடலுக்கு பலம் தரக்கூடியதும், தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியதுமான சர்க்கரை வள்ளி கிழங்கின் பயன்களை அறிவோம்.
மரவள்ளி கிழங்கிற்கு ஏழிலை கிழங்கு என்ற பெயர் உள்ளது. ஏழு இதழ்களை பெற்று இருப்பதால் அந்த பெயரை பெற்றுள்ளது. மரவள்ளி கிழங்கு ஏழைகளின் உணவு. சரிவிகித உணவான இதில், வைட்டமின் ஏ சத்து மிகுந்து காணப்படுகிறது. மரவள்ளி கிழங்கு கண்களுக்கு தெளிவான பார்வையை தரும் தன்மை கொண்டது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. உடலுக்கு ஊட்டசத்தாகிறது.
மரவள்ளி கிழங்கின் இலை விஷக்கடிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. இலையை பசையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதை தேள், பூச்சி கடிவாயில் வைத்து கட்டுவதால் விஷம் முறியும். வலி, வீக்கம் குறையும். மரவள்ளி கிழங்கை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். மரவள்ளி கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.
அதில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஞ்சி போன்று தயாரிக்க வேண்டும். கஞ்சியை ஆற வைத்து அரிப்பு இருக்கும் இடத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து அதை துடைத்து விடலாம். இவ்வாறு செய்தால் அரிப்பு, தடிப்பு சரியாகும். மரவள்ளி கிழங்கு புரதச்சத்தை மிகுதியாக கொண்டுள்ளது. மாவுச்சத்தை அதிகம் பெற்றுள்ளது. இதில் வைட்டமின் ஏ,பி உள்ளது. கண்களுக்கு மருந்தாகிறது. எலும்புக்கு பலத்தை தருகிறது. உடல் எடையை கூட்டும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை குறைக்கும். சிறுநீரை பெருக்கும். பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.
சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். சர்க்கரை வள்ளி கிழங்கு இலைகளை பயன்படுத்தி தொழுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 5 இலைகளுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடிக்கலாம். இதன் இலையை பற்றாக போட்டால் புண்கள் ஆறும். சர்க்கரை வள்ளி கிழங்கில் இருந்து குளுக்கோஸ் தயாரிக்கப்படுகிறது. இது நல்ல உணவாகிறது. இலைகள், கிழங்குகள் தோல்நோய்க்கு மருந்தாகிறது. தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியது.
சர்க்கரை வள்ளி கிழங்கை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் உணவு தயாரிக்கலாம். வேகவைத்த கிழங்கு, தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய், நெய் எடுத்துக்கொள்ளவும்.சர்க்கரை வள்ளி கிழங்குடன், சிறிது ஏலக்காய் பொடி, வெல்லம் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் எடுத்து கொண்டு அதை உருக்கவும். அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். இதனுடன் சர்க்கரை வள்ளி கிழங்கு கலவையை சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். போலி, கொலுக்கட்டை போன்றவற்றுக்கு பூரணமாகவும் பயன்படுத்தலாம்.. வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கின் இனிப்பு சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கிழங்கு உடலுக்கு பலம் தரக் கூடியது.


இந்த கிழங்கின் மிக முக்கியமான சிறப்பு என்ன? மற்ற எந்தக் காய்கறிகளுக்கும் இருக்கும் சக்தியைப் போல் மூன்று மடங்கு சக்தியுடன், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக விளங்குகிறது. இந்த வீரியமுள்ள சக்தி எந்த நிறத்தில் உள்ள சக்கரை வள்ளிக் கிழங்குக்கும் பொருந்தும். ஓட்மில் என்ற உணவுப் பொருளே மிக அதிக அளவு நார்ச் சத்தைக்கொண்டது. 

அதையும்விட அதிக அளவு நார்ச்சத்து இந்தக் கிழங்கில் உண்டு. ஆனால், இதைத் தோலுடன் சாப்பிட்டால்தான், நார்ச்சத்து நிறையக் கிடைக்கும். ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் ‘ஏ’ சத்தைப் போல் இரண்டு மடங்கு ஒரு கிழங்கைச் சாப்பிடுவதிலேயே கிடைக்கும். அத்துடன் தேவையான வைட்டமின் ‘சி’ அளவில் பாதியும் கிடைக்கிறது. பீடாகரோடினும் நிறைந்துள்ள இந்தக் கிழங்கை வேக வைத்து உண்பதால் நம் உடலில் சேர்வது 150 கலோரிகளே! வைட்டமின்கள் மட்டுமல்லாது மாங்கனீஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும் இதில் உள்ளன. இந்தக் கிழங்கில் தேங்கிக்கிடக்கும் புரதச்சத்துதான் ‘ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்’ சக்தி உடையது. மற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது சில நச்சுப்பொருட்கள் உடலில் தேங்கிவிட வாய்ப்பு உண்டு. அந்த நச்சுப் பொருட்களை இந்தப் புரதச் சத்து உடலிலிருந்து அடியுடன் நீக்குகிறது. சர்க்கரை வள்ளிக் கிழங்குக்கு ஓர் அபூர்வ சக்தி உண்டு. சிலர் அவர்களது வயதுக்கு மீறி முதுமையானவராகத் தெரிவர். இவர்களின் இந்தக் குறை நீங்க, இந்த கிழங்கு ஒரு வரப் பிரசாதம். இந்தக் கிழங்கில் உள்ள வைட்டமின் பி6 சத்து இருதயத்துக்கு நல்ல டானிக். புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் சுவாசப் பாதிப்பைக்கூட இந்தக் கிழங்கு நீக்குகிறது. சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்ற பெயர் இருப்பதால், இதனைச் சாப்பிட நீரிழிவு நோயாளிகள் அஞ்சுகிறார்கள். ஆனால் இந்தக் கிழங்கில் ஓர் அற்புதக் குணம் உண்டு. இதைச் சாப்பிடுவோர்க்கு உடலில் இன்சுலின் சீராகச் சுரக்கவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைக்கவும் உதவும். இதில் உள்ள நார்ச்சத்து உணவில் உள்ள க்ளுகோஸினை ரத்தத்தில் சேர்க்கும் வேகத்தை வெகுவாகக் குறைக்கிறது. அதற்காக, நீரிழிவு நோயாளிகள் இதனை நன்றாகச் சாப்பிடலாம் என்று பொருள் இல்லை. உணவில் சாதம் அல்லது மாவுச் சத்து நிறைந்த பொருள் ஏதும் இருந்தால், அதற்குப் பதிலாக ஒரு கிழங்கை வேகவைத்துச் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த இந்தக் கிழங்கு, வயிற்றுக்கு சிறந்த நண்பன். இத்தனை குணங்கள் நிறைந்த இதனை வேகவைத்து குழந்தைகள் மட்டுமல்ல, அனைத்து வயதினரும் சாப்பிடலாம்!


சேப்பங்கிழங்கு


சேப்பங்கிழங்கு

இது செடியினத்தைச் சேர்ந்தது. இது வழவழப்பாக இருக்கும். இதில் நான்கு வகைகள் இருந்தாலும் கிழங்கின் நிறத்திலோ, ருசியிலோ, குணத்திலோ வேறுபாடு இருப்பதில்லை.

இதில் இரும்புச் சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் எ, பி ஆகிய உயிர்ச்சத்து சிறிதளவும் இருக்கின்றன.

இருந்தாலும் இக்கிழங்கு கோழையை அதிகரிக்க வல்லது. இதை அதிகமாகவோ, அடிக்கடியோ சாப்பிடுபவர்களுக்குத் தொண்டையில் கோழை கட்டும்; இருமல் வரும்.

ஆகவே இக்கிழங்குடன் புளி சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலும், இஞ்சி, வெள்ளைப் பூண்டைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலும், கெடுதல்கள் குறையும்.மலச்சிக்கலை நீக்க வல்லது.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது. சில ஆண்டுகளுக்கு பலவீனம் காரணமாகவோ, வயோதிகத்தினாலோ ஆண் தன்மைக் குறைவு ஏற்படும். அத்தகையவர்கள் இந்தக் கிழங்கைச் சாப்பிட்டு வந்தால் ஆண் தன்மைக் குறைவைப் போக்குவதோடு, இந்திரியத்தையும் கெட்டிப்படுத்தும்.
இதை அப்படியே அரைத்து, கட்டிகளுக்கும், புண்களின் மேலும் பற்றாகப் போட்டால் குணமாகும்.

இது வாதத் தன்மையை அதிகரிக்கவல்லது. எனவே வாத தேகம் உள்ளவர்கள் அல்லது வாத நோயால் அவதிப்படுபவர்கள் இக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.
அத்துடன், இந்தக் கிழங்கு மருந்துகளின் வீரியத்தை மட்டுப்படுத்தும் தன்மை உடையது. அதனால் நோய்க்குச் சிகிச்சை பெற்று வருபவர்களும் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

எப்போதாவது ருசிக்காகக் கொஞ்சம் சாப்பிடலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு

மக்கள் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக் கிழங்கு.
இதில் புரதம், இரும்புச் சத்து மற்றும் சிறிதளவு வைட்டமின் சத்துக்களும் உள்ளன. உருளைக் கிழங்கை அதிகம் சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள்ஏற்படும் என்பார்கள். இது உண்மை தான்.

எனவே உருளைக் கிழங்கின் மேல் தோலை நீக்காமல் சமைத்துச் சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.

உருளைக் கிழங்கில் அரிசியில் இருப்பது போன்றே மாவுப் பொருள் இருப்பதால், எஸ்கிமோ என்ற இன மக்கள் முழு உணவாகவே சாப்பிடுகின்றனர்.

இது உடலுக்கு வலிமை தருகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு நன்றாக வேக வைத்து உருளைக் கிழங்கைச் சாப்பிடக் கொடுக்கலாம்.
சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் சக்தி உடையது. ஆனால் தோலை நீக்காமல் உருளைக் கிழங்கைப் பயன்படுத்த வேண்டும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்குச் சில நேரங்களில் தாய்ப்பால் சுரப்பது குறையும். அப்போது உருளைக் கிழங்கைச் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

தோலை நீக்கி விட்டுக் கிழங்கைச் சமைப்பதாக இருந்தால், அதனுடன் பூண்டு, இஞ்சி போன்ற பொருள்களைச் சேர்த்துக் கொண்டால், வாய்வுத் தொல்லை ஏற்படாது.

இருந்தாலும் வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இந்தக் கிழங்கைச் சாப்பிடவே கூடாது.வயதானவர்கள் அடிக்கடியும், அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.

இக்கிழங்கைத் தண்ணீர் விட்டு அலம்பி இடித்து, அரைத்துக் கட்டிகளின் மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் கட்டி பழுத்து உடையும்.கண்களின் கீழ் கருவளையம் இருந்தால், உருளைக்கிழங்கைச் சாறு எடுத்துத் தடவலாம்.

மேல் தோலைச் சீவி விட்டு, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து ஆறாத புண்கள் மீதும், படை, சொறிகளின் மீதும் பற்றாகப் போட்டால், புண் ஆறி விடும்.

கருணைக் கிழங்கு

கருணைக் கிழங்கு

இந்தக் கிழங்கை அடிக்கடிச் சாப்பிடுவதன் மூலம் சிலவகை நோய்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம்.

கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை.
(1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும்.
காரும் கருணையைப் பிடிகருணை என்றும்,

காராக் கருணையைச் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான்.

முதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும்.

சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்; அரிப்பு இருக்காது.

சிலர் அரிசி கழுவிய நீரில் காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு. இதனாலும் காரல், நமைச்சல் மட்டுப்படும்.

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க,இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது.

காராக் கருணை பெரிய அளவில் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அதன் மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்று சொல்லுவார்கள். இந்தக் கிழங்கில் காரல் இருக்காது.

இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளன.

இதன் மேல் தோலைச் சீவி விட்டு நறுக்கிச் சமைக்கலாம். இதை வைத்து குழம்பு, பொரியல், பருப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம். அல்லது எண்ணெயில் வறுத்துச் சிப்ஸாகச் சாப்பிடலாம். இது சாப்பிட ருசியாகவும் இருக்கும்.

காரும் கருணைக்கு இருப்பது போன்ற மருத்துவக் குணங்கள் இதற்கும் உண்டு.

ராகி கூழ்

ராகி கூழ்
தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு - அரை கப், கடைந்த மோர் - 2 கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெள்ளரிக்காய் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை: பாத்திரத்தில் அரை கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். தளதளவென கொதிக்கும்போது, உப்பு, ராகி மாவு சேர்த்து மாவு வேகும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். ஆறியதும், உருண்டைகளாக உருட்டி, தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு, கொரகொரப்பாக அரைக்கவும்.

ராகி உருண்டைகளைத் தண்ணீரில் இருந்து எடுத்து கைகளால் கரைக்கவும். இத்துடன் அரைத்த பச்சை மிளகாய் கலவை, சீரகத்தூள், கடைந்த மோர், தேவையான உப்பு, துருவிய வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு கலந்து, ராகி உருண்டைகளை ஊறவைத்த தண்ணீரும் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துப் பரிமாறவும்.

உடலுக்கு குளிர்ச்சி, வயிற்றுக்கு இதம் கொடுக்கும் இந்த  ராகி கூழ்... நீண்ட நேரம் பசி தாங்க உதவும். 

தேங்காய்ப்பால் டிலைட்

தேங்காய் டிலைட்
தேவையானவை: கெட்டி தேங்காய்ப்பால் - அரை கப், இளநீர் - அரை கப், தேன் - 2 டீஸ்பூன், வறுத்து, அரைத்த உளுந்து மாவு - ஒரு டீஸ்பூன், இளநீருடன் வரும் வழுக்கை தேங்காய் - 2 டீஸ்பூன், ஐஸ் துண்டுகள் - 4.

செய்முறை: கெட்டி தேங்காய்ப்பால், இளநீர், தேன், உளுந்து மாவு, ஐஸ் துண்டுகளை சேர்த்து, மிக்ஸியில் நுரை வர அடிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி, இளநீர் வழுக்கையை மேலாக சேர்த்துப் பரிமாறவும்.

தேனும், இளநீரும் உடலுக்கு உடனடியாக சக்தி தரக்கூடியவை. 

ஹெர்பல் காக்டெய்ல்

ஹெர்பல் காக்டெய்ல்
தேவையானவை: எலுமிச்சை இலைகள் - ஒரு கப், அருகம்புல்  - ஒரு கப், இளம் சிவப்பாக உள்ள மா இலை - 10, துளசி இலை - ஒரு கப், எலுமிச்சைப் பழம் - 2, சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு கப், எலுமிச்சை தோல் துருவல் - கால் டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: எலுமிச்சை இலைகள், அருகம்புல், மா இலைகள், துளசி இலைகள் இவற்றை நன்கு சுத்தம் செய்து, பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடிவைக்கவும். வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைக்கவும். தளதளவென கொதிக்கும்போது அடுப்பை அணைக்கவும்.

கொதிக்கவைத்த ஹெர்பல் கலவையை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். இதனுடன் வெல்லக் கரைசல் சேர்க்கவும். சுக்குப்பொடி, எலுமிச்சைச் சாறு, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சை தோல் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும். 

இதைப் பானையில் ஊற்றிவைத்து, குளிர்ந்ததும் அருந்தினால், கூடுதல் மணம், சுவையுடன் இருக்கும். எலுமிச்சைச் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் சேர்க்கப்படுகிறது. தேவையில்லை என்பவர்கள் தவிர்க்கலாம்.

நன்னாரி சர்பத்

நன்னாரி சர்பத்
தேவையானவை: நன்னாரி வேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - 2 கப், சர்க்கரை - ஒரு கப், எலுமிச்சைப் பழம் - 2, சிவப்பு ஃபுட் கலர் - 2 சிட்டிகை.

செய்முறை: நன்னாரி வேரை, தண்ணீரில் கழுவி எடுத்து, பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, இந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடிவைக்கவும்.

சர்க்கரையை வேறொரு பாத்திரத்தில் சேர்த்து, ஒரு கரண்டி தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து, கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். சிவப்பு ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கவும். நன்கு ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நன்னாரி வேர் கொதித்த தண்ணீரை வடிகட்டி, இத்துடன் சேர்த்துக் கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவையானபோது, இந்த ஜூஸை கால் கப் எடுத்து முக்கால் கப் குளிர்ந்த நீர் சேர்த்து அருந்தலாம். துருவிய இஞ்சி சிறிதளவு சேர்ப்பது, கூடுதல் சுவை தரும்.

பன்னா

பன்னா
தேவையானவை: புளிப்பில்லாத மாங்காய் - 2, சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன், கொரகொரப்பாக பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன்.

செய்முறை: மாங்காய்களைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு, இறக்கி ஆறவைத்து தோலை உரித்து, கைகளால் மசித்து எடுக்கவும் (கொட்டையை நீக்கி விடவும்). இத்துடன் 2 கப் தண்ணீர், சர்க்கரை, பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்லென பரிமாறவும். 

தண்டாய்

தண்டாய் - பானம்
தேவையானவை: பாதாம் - 10, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, மிளகு - 10, சர்க்கரை - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பன்னீர் ரோஜா - 2 (இதழ்களை எடுத்துக்கொள்ளவும்), காய்ச்சி, ஆறவைத்து, ஃப்ரிட்ஜில் குளிர்வித்த பால் - அரை லிட்டர்.

செய்முறை: பாதாமை சூடான நீரில் ஊறவைத்து எடுத்து, தோலுரித்து, மையாக அரைக்கவும். மிளகைப் பொடிக்கவும். பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து ஒரு கம்பி பதத்தில் பாகு வரும்போது, அரைத்த பாதாம் சேர்த்து கலந்துவிடவும். பொடித்த மிளகு, மஞ்சள்தூள், குங்குமப்பூ, 4 இதழ்கள் தவிர மீதமுள்ள ரோஜா இதழ்கள் சேர்த்து, அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடிவிடவும். நன்கு ஆறியபின், குளிர்ந்த பால் சேர்த்துக் கலந்து மேலாக ரோஜா இதழ்களால் அலங்கரித்து, `ஜில்’லென பரிமாறவும்.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் 

தேவையானவை: 
மாதுளை பெரிது - 1,  தேன் - சிறிதளவு. 

செய்முறை: மாதுளை முத்துக்களை மிக்ஸியில் போட்டு, தேன், சிறிது நீர்விட்டு அரைத்து வடிகட்டி அருந்தலாம்.
பலன்கள்

உடல் எடையைக் குறைக்கும்.

செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தாமதப்படுத்தும். ஏற்கெனவே, உருவான புற்றுசெல்களை அழிக்கும்.

தொடர்ந்து இந்த ஜூஸைப் பருகிவந்தால்,  உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

இதயத்தைப் பாதுகாக்கும்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகளில் மாதுளை பயன்படுத்தப்படுகிறது.

சப்போட்டா ஜூஸ்

சப்போட்டா ஜூஸ் 

தேவையானவை: சப்போட்டா - 6, பால் - அரை கப், தேன் - சிறிதளவு. 

செய்முறை: 
சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கிக் கொட்டைகளை அகற்றி, பால், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அப்படியே பருக வேண்டும்.
பலன்கள்

அதிக அளவு கலோரி நிறைந்தது. உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு ஏற்றது.

நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை தடுக்கும். 

குடலில் இருக்கும் மியூகோசாவைப் பாதுகாப்பதால் குடலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும்.

வைட்டமின் சி, வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்திருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுவாக்கும்.

கிவி ஜூஸ்

கிவி ஜூஸ் 

தேவையானவை:
 கிவிப் பழங்கள் - 2, தேன், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.

செய்முறை:
 கிவிப் பழத்தைச் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்க வேண்டும். சிறிதளவு தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து  வடிகட்டாமல் அருந்த வேண்டும்.
பலன்கள்  

ஃபோலிக் அமிலம், தாமிரம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, சி, இ, கே நிறைந்துள்ளன. 

ஒரு கப் கிவி ஜூஸில் ஒரு நாளைக்குத் தேவையான அளவைவிட வைட்டமின்-சி அதிகமாக இருக்கிறது.  

கிவி ஜூஸை சீரான இடைவெளியில் அருந்திவந்தால், எலும்புகள் உறுதிப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

ஓமேகா - 3 மற்றும் ஃபேட்டி ஆசிட் இதில் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது.

இதய நோய்களில் இருந்து காக்கும், நரம்பு மண்டலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி இதை அருந்த வேண்டும்.

லெமன் மின்ட் கூலர்

லெமன் மின்ட் கூலர்

தேவையானவை: புதினா - 1 கொத்து, எலுமிச்சை -1, சர்க்கரை - 50 கிராம், தண்ணீர் -150 மி.லி, ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.

செய்முறை: புதினாவைச் சுத்தம் செய்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரைச் சேர்த்து, தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். இதை, வடிகட்டாமல் ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருக வேண்டும்.
பலன்கள்

செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

சர்க்கரை நோய், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

சரும செல்களைப் புத்துணர்ச்சி அடையச்செய்யும். தேகம் பொலிவாகும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். `ஆர்த்தரைட்டிஸ்’ எனப்படும் மூட்டுகளில் ஏற்படும் கீல்வாத நோய்களைத் தடுக்கும்.

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 150 கிராம், தண்ணீர் - 200 மி.லி., சர்க்கரை - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். தேவையான அளவு ஐஸ் சேர்த்து அருந்தலாம்.
பலன்கள்
ஸ்ட்ராபெர்ரியில் ஆன்தோசயனின் நிறைந்திருப்பதால், கெட்ட கொழுப்பு எரிக்கப்படும்.
மேலும், வைட்டமின் கே, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளன.
ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பயாட்டின், தலைமுடிகளை உறுதியாக்கும்.
நகங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. சருமம் பளபளக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

நெல்லிக்காய் ஜுஸ்

நெல்லிக்காய் ஜுஸ்

தேவையானவை: 
நெல்லிக்காய் - 3, துளசி, புதினா இலைகள் - நான்கு ஐந்து, இளநீர், உப்பு  - தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, இளநீர் ஊற்றி அரைக்க வேண்டும். இதில், உப்பு, துளசி, புதினா இலைகள் சேர்த்து அருந்தலாம்.
பலன்கள்

செரிமானப் பிரச்னைகள் தடுக்கப்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால், புற்றுநோய், இதயப் பிரச்னைகள் வராது. 

தொண்டைத் தொற்றுகளை நீக்கக்கூடியது.

உடல் எடையைக் குறைக்க உதவும். 

கல்லீரலைச் சுத்தம் செய்யும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் உப்பையும், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையையும் சேர்க்கக் கூடாது.

தர்பூசணி திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தர்பூசணி  திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

தேவையானவை: தர்பூசணி - 300 கிராம், பன்னீர் திராட்சை - 50 கிராம், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: 
தர்பூசணியைத் தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பன்னீர் திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், தர்பூசணித் துண்டுகள் மற்றும் பன்னீர் திராட்சையை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். இதில், ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தேன் கலந்து குடிக்கலாம்.
பலன்கள்

திராட்சையில் ‘ரெஸ்வெரட்ரால்’ எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது, மலக்குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய், கரோனரி இதய நோய்கள், அல்சைமர் போன்றவற்றைத் தடுக்கும்.

உடல் பருமனானவர்களும் தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தலாம்.

தேன், தர்பூசணி, திராட்சை மூன்றுமே தோலுக்கு நல்லன.

தாமிரம், துத்தநாகம், இரும்பு நிறைந்துள்ளன. உடனடி ஆற்றல் தேவைப்படும் காலங்களில் இந்த மிக்ஸ்டு ஜூஸை அருந்துவது நல்லது.

கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்

கறிவேப்பிலை - கொத்தமல்லி ஜூஸ்
தேவையானவை: கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி,  புதினா - கால் கைப்பிடி, தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, எலுமிச்சை - 1/2 பழம், உப்பு அல்லது தேன் - தேவையான அளவு.

செய்முறை: 
எலுமிச்சையைச் சாறு எடுத்து, தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி ஆகியவற்றோடு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, மிக்‌ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டாமல் ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இதனுடன், எலுமிச்சைச் சாறு  மற்றும் தேவைப்பட்டால் உப்பு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்

வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் உள்ளன. 

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட வேளையில், இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் தேன், உப்பையும், சிறுநீரக நோயாளிகள் உப்பை மட்டும் தவிர்க்கலாம்.

சிறந்த டீடாக்ஸ் ட்ரிங்க் இது. வடிகட்டிப் பருகினால், சத்துக்கள் பெருமளவு குறைந்துவிடும். எனவே, வடிகட்டாமல் குடிப்பதே நல்லது.

வெள்ளரி -ஆரஞ்சு ஜூஸ்

வெள்ளரி -ஆரஞ்சு ஜூஸ்

தேவையானவை: ஆரஞ்சு - 4, நடுத்தர அளவு வெள்ளரி - 1, செலரி - சிறிதளவு, இஞ்சி - நறுக்கியது சிறிதளவு, பனங்கற்கண்டு அல்லது பனஞ்சர்க்கரை - தேவையான அளவு. 

செய்முறை: ஆரஞ்சு மற்றும் வெள்ளரியைத் தோல் நீக்கி, செலரி, இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டிப் பருக வேண்டும். தேவைப்பட்டால், சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
பலன்கள்

ஆரஞ்சு, செலரி, வெள்ளரி, இஞ்சி கலோரி குறைந்தவை. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் `பெக்டின்’ என்ற ரசாயனம், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும்.

உடலுக்குக் குளிர்ச்சி தரும். செலரி ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. செலரிக்குப் பதிலாக புதினா, கொத்தமல்லி சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்.

செரிமான சக்தியை மேம்படுத்தும். குமட்டலைத் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இந்த ஜூஸை அருந்தலாம். குழந்தைகள், இளைஞர்கள், பெண்களுக்கு ஏற்ற ஜூஸ்.

உணவுக் குழாயில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் என்பதால், சருமம் பொலிவு பெறும்.