Wednesday 11 April 2018

ராகி (எ) கேழ்வரகு

ராகி (எ) கேழ்வரகு


கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன
பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன
இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும்.
 நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது.
உடல் சூட்டை தனிக்கும்.
குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும்.
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர குணமடையும்.
கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது.
இது ஜீரணமாகும் நேரம் எடுத்து கொள்வதால், கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாகும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம். கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. கூழாக குடிக்கும் போது சிக்கிரம் ஜீரணம் அடைந்து விடும்.
கொலஸ்டிராலை குறைக்கும்.
இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .
இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம்.
பசியின் பொது சுரக்கும் அமிலத்தை சற்றுக் குறைத்து உடல் எடையை நிலையாக வைத்து இருக்க உதவும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைக் காலை சிற்றுண்டியாக பருகுகின்றனர். கேழ்வரகு கூழை தொடர்ந்து காலையில் உட்கொள்ளுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு அவர்களுடைய சர்க்கரை அளவு சற்று குறைந்து விடும்.
நிலங்களிலும் ,வயல்களிலும் வேலை செய்யும் பல கூலித் தொழிலாளிகள் விரும்பி உண்ணும் உணவாக இது கருதப்படுகிறது.
உடலில் இருக்கும் தேவை அற்ற கெட்ட கொழுப்பை அகற்ற மட்டுமின்றி குடலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
கூழில் நார் சத்து அதிகமாக உள்ளது குருதியில் இருக்கும் கொழுப்பையும் குறைக்க வல்லது.
கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம்பாஸ்பரஸ்தயமின்,கார்போஹைட்ரேட் உள்ளன.
இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.
எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.
இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.
எந்த தானியத்தை விடவும் ராகியில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் தீவிரம் குறையவும், இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கவும் உதவுகிறது.
 
கேப்பை, கேழ்வரகு, நச்சினி, மண்டுவா என பல பெயர்களால் விளிக்கப்படும் ராகி, நம் தேசத்தின் முழு நீள, அகல நிலப்பரப்பில் பயிரிடப்படும், ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம். 
 
கேழ்வரகில் ‘பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு, எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது. 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது. பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச் சத்து, மருந்தாய் வேலை செய்கிறது.
 
கேழ்வரகை களியாய், ரொட்டியாய் உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு உத்தமம். அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவையை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும். 
 
கோதுமை முதலான உணவுப் பொருட்களால் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகை ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு, 6 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடியதும், ஊட்டச்சத்தை அள்ளித் தருவதுமான மிகச் சிறந்த உணவுகளில் ராகியும் ஒன்று.
 
6 மாதம் முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் முறை: கேழ்வரகை சுத்தம் செய்து, ஓர் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். பின், தானியத்தை மாவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு காட்டன் துணியில், பிழிந்து தெளிந்த பாலாய் பிரித்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பாலை காய்சி கூழ் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கேழ்வரகு ஒவ்வாமை உடைய பெரியவர்களும், இந்த முறையில், ராகியின் பயனை அடையலாம்.

No comments:

Post a Comment