Friday 13 April 2018

மூலிகை பொடிகளின் பயன்கள்

மூலிகை பொடிகளின் பயன்கள்


கொழுப்பைக் குறைக்கும் மூலிகை பொடிகள் 


அருகம்புல் பவுடர் :-
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
வில்வம் பவுடர் :-
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
லவங்கபட்டை பவுடர் :-
கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
சர்க்கரை நோய் குணமாக
கருஞ்சீரகப்பவுடர் :-
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
நவால் பவுடர் :-
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
சிறுகுறிஞான் பவுடர் :-
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
வெந்தய பவுடர் :-
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது
பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
இதயத்தை காக்க
ரோஜாபூ பவுடர் :-
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
உடல் முகம் அழகு பெற

சோற்று கற்றாலை பவுடர் :-
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்
பூலாங்கிழங்கு பவுடர் :-
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
கஸ்தூரி மஞ்சள் பவுடர் :-
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
வெட்டி வேர் பவுடர் :-
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்கோ
கோரைகிழங்கு பவுடர் :-
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
நரம்பு தளர்ச்சி, ஆண்மையை கூட்ட
முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்
கோரைகிழங்கு பவுடர் :-
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
ஓரிதழ் தாமரை பவுடர் :-
ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
மூட்டுவலி, கால் வலி தொல்லை

முடக்கத்தான் பவுடர் :-
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
கடுக்காய் பொடி:-
மூட்டுவலி, முழங்கால் வலி தீர, உடல் குளிர்ச்சி அடைய, மளமிளக்க
மலமிளக்க
கடுக்காய் பொடி:-
மூட்டுவலி, முழங்கால் வலி தீர, உடல் குளிர்ச்சி அடைய, மலமிளக்க.
நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
நினைவாற்றல், நரம்பு தளர்ச்சி நீங்க
ஜாதிக்காய் பவுடர் :-
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்
வல்லாரை பவுடர் :-
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
சுவாச நோய்கள் தீர
ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு
சிறந்ததுசித்தரத்தை பவுடர் :-
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
கண்டங்கத்திரி பவுடர் :-
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
பிற நோய்கள் தீர மூலிகை பொடிகள்
மருதாணி பவுடர் :-
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
கருவேலம்பட்டை பவுடர் :-
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
நெருஞ்சில் பவுடர் :-
சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
வெள்ளருக்கு பவுடர் :-
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
பொடுதலை பவுடர் :-
பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
சுக்கு பவுடர் :-
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது
வாழைத்தண்டு பவுடர் :-
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது
வாதநாராயணன் பவுடர் :-
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்
துத்தி இலை பவுடர் :-
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து
திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
அதிமதுரம் பவுடர் :-
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்
வேப்பிலை பவுடர் :-
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது
நாயுருவி பவுடர் :-
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
திப்பிலி பவுடர் :-
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
🍇🍍🍋🍏🍈🍑🍊🍒🍎🍇
இஞ்சி, சுக்கு, கடுக்காய் மருத்துவம்- சித்தர்கள்
இஞ்சி, சுக்கு, கடுக்காய், உண்ணும் முறை
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே.
சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர்.
ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.
சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான்.
அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.
நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.
அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.
வாதம் – காற்று – 1,மாத்திரை அளவு.
பித்தம் – நெருப்பு – 1/2,மாத்திரை அளவு.
கபம் – நீர் – 1/4-மாத்திரை அளவு.
இதுதான் சித்த மருத்துவ நாடியின் அளவுகளாகும்.
இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.
இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.
வாதம் – காற்று – 1, மாத்திரை அளவு — சுக்கு.
பித்தம் – நெருப்பு – 1/2,மாத்திரை அளவு — இஞ்சி.
கபம் – நீர் – 1/4-மாத்திரை அளவு — கடுக்காய்.
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் , நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான்.
எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.
சுக்குக்கு புற நஞ்சு –
கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது.
அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,
கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு .
எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.
சுக்கு சுத்தி ;
தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.
பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும்.
சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.
பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .
இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.
கடுக்காய் சுத்தி ;
கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும்.
சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.
இஞ்சி சுத்தி ;
இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும்.
இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும்
இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .
இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.
உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.
இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.
இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.
மலம் மிதமாக இளகிப் போகும்.
இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.
பழமொழி :
கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.

No comments:

Post a Comment