Friday 20 April 2018

சோம்பு தண்ணீர்

சோம்பு தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்...!


தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தால் உடல் எடையை குறைக்கலாம். சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இங்கு சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும்.

அளவுக்கு அதிகமாக பசி எடுப்பவர்களுக்கு சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தில் சுத்தப்படுத்தும். மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.

சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சிரப்பியால் சுரக்கப்படும் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.

Thursday 19 April 2018

நுங்கு , பதநீர்

கோடையின் கொடை நுங்கு – பதநிர்

கோடை விடுமுறை விட்டாச்சு. சூரியன் ஸ்ட்ராவைத்து, உடலில் இருக்கும் நீரை, உறிஞ்சத் தொடங்கிவிட்டது. அதை, ஈடுசெய்யாவிட்டால், உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, பல்வேறு பிரச்னைகள் வந்துவிடும். வைட்டமின்கள், நீர்ச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்த, நுங்கும் பதநீரும் உடலின் நீர் இழப்பைச் சரிசெய்யும்.  
 பனங்குருத்தைத் லேசாகச் சீவிவிட்டு, அதில் வடியும் நீரை,
மண்பாண்டத்தில் சேகரிப்பதே பதநீர்.  இனிப்புக் குறைந்த இந்த திரவம், ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்குள் காற்றில் உள்ள பூஞ்சையால் நொதித்து, ‘கள்’ ஆகிவிடும். அதைத் தடுக்கவே, பானையின் உட்புறத்தில், லேசாகச் சுண்ணாம்பு தடவப்படுகிறது.  நம் உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது பதநீர்.  இதிலிருந்து கிடைக்கும் பனை வெல்லம், இருமலுக்கு உகந்தது.  கொதிக்கவைத்து ஆறவிட்டு, உடல் புண்களின் மேல் கட்டினால், காயம் சீக்கிரம் ஆறிவிடும்.
 250 மி.லி பதநீரில் 113 கி.கலோரியும் 26  சதவிகிதம் சர்க்கரையும் உள்ளன.  பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் இதில் உள்ளன. வைட்டமின் சி இதில் அதிகம். பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான தையமின் நரம்பு வளர்ச்சிக்கும், இதயத்துக்கும் நல்லது. ரிபோஃப்ளேவின், வாய்ப்புண்ணுக்கு நல்லது. நிக்கோடினிக் ஆசிட் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.
 பனை மரத்தின் பழத்தில், விதை உருவாகும் இடமே நுங்கு. பனம் பழம், இளம் காயாக இருப்பதையே நுங்கு என்று சொல்வோம். நீர்ச்சத்து நிறைந்த நுங்கு, வயிற்று உபாதைகளைப் போக்கும். நுங்கை, இளநீர் மற்றும் பதநீருடன் கலந்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.
 100 கிராம் நுங்கில் மொத்தம், 43 கலோரிகளும், கால்சியம் 10 மி.லி.கிராமும், பாஸ்பரம் 20 மி.லி. கிராமும் இருக்கிறது. நுங்கில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து, வயிற்றை நிரப்பி, பசிஎடுக்காமல் செய்துவிடும். உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் நுங்கு சாப்பிடலாம்.
 நுங்கு, கற்றாழை ஜெல் இரண்டையும் மசித்து, பயத்தமாவு கலந்து, முகத்தில் பூசிவர, முகம் பிரகாசிக்கும். உடலில் தேய்த்துக் குளிக்கலாம். வியர்க்குரு, வேனல் கட்டிகள், கொப்பளங்கள் போன்ற சரும நோய்கள் அண்டாது.

 நுங்கில் உள்ள ஆந்தோசைனின் என்ற ரசாயனம், மார்பகப் புற்று நோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும். இதில் உள்ள பொட்டாசியம் கல்லீரலின் நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும்.
 மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, அஜீரணத்தைப் போக்கும் என்பதால்,  கர்ப்பிணிகள்  அதிக அளவு எடுத்துக்கொள்ளலாம். குளிர்ச்சியானது என்பதால், உஷ்ண தேகம்கொண்டவர்கள் சாப்பிடலாம். இதில் உள்ள தாது உப்புக்கள் உடலுக்கு சுறுசுறுப்பைத் தரும்.
பனை மரம்... இலை முதல் விதை, பழம் என அதன் அனைத்து உறுப்புகளும் மனிதனுக்கு நலம் தரக்கூடியவை. அதனால்தான் தமிழக அரசின் மாநில மரம் என்ற பெருமையை பனைமரம் கொண்டுள்ளது. நுங்கு, பதநீர் போன்றவை தமிழரின் உணவுகள். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பனை மரத்தொழில் பரவலாகக் காணப்படுகிறது.
ஆண் - பெண் பனை
பனையில் ஆண் பனையை அலகுப்பனை என்றும், பெண் பனையை பருவப்பனை என்றும் சொல்கிறார்கள். பெண் பனையிலிருந்துதான் நுங்கு கிடைக்கும். ஆனால், ஆண், பெண் இரண்டு பனைகளில் இருந்தும் பதநீர் எடுக்கலாம். யதார்த்தம் இப்படியிருக்க பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் அதன்பிறகு நுங்கு கிடைக்காது. அப்படி நுங்கு கிடைக்காவிட்டால் பனம் பழம் கிடைக்காது.
சத்துகள் நிறைந்தது
நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பனை நுங்கில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் உலோக உப்புகள், வைட்டமின் சி, சர்க்கரைச் சத்து போன்றவை உள்ளன. கோடை வாட்டி எடுக்கும் இந்தத் தருணத்தில் உடல் சூட்டைப் போக்கவும் வெம்மை நோய்களில் இருந்து காத்துக்கொள்ளவும் என்னென்ன ஏதேதோ பானங்களையும், செயற்கைக் குளிரூட்டிகளையும் அருந்துகிறோம். பனை நுங்கு, கோடைக்கு ஏற்ற நல்லதொரு உணவுப்பொருளாகும். இது உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்குவதுடன் வைட்டமின் பி, சி போன்ற சத்துகள் இதில் நிறைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
ஜீரணம் கவனம்
பனைமரத்தின் காயை வெட்டினால் அதன் உள்ளே நுங்கு கண்களைப்போல தனித்தனியாக இருக்கும். இதை அப்படியே கைவிரலால் அழுத்தி எடுத்துச் சாப்பிடலாம். பெரும்பாலும் மூன்று நுங்குகள் இருக்கும். நுங்கின் மேல்தோல் துவர்ப்புத்தன்மையுடன் இருக்கும். சுவைக்கு அடிமைப்பட்ட நாம் உடனே தோலை நீக்கிவிட்டு வெறும் சதைப்பகுதியை மட்டும் சாப்பிடுவோம். இப்படி வெறும் சதைப்பகுதியை மட்டும் சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துகள் முழுமையாகக் கிடைக்காமல் போய்விடும். சிறு குழந்தைகளுக்கு சாப்பிடக்கொடுத்தால் அவர்களுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் அவற்றை நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்குக்கூட ஜீரணமாகாது என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. இளம் நுங்கே சாப்பிடத் தகுந்தது.
அம்மைநோய்க்கு மருந்து
பனை நுங்கு அம்மை நோயால் அவதிப்படுபவர்களுக்கு நல்லதொரு மருந்தாகும். அம்மை நோய் பாதித்தவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதோடு, குடலில் உள்ள சிறு சிறு புண்களும் ஆறும். கோடையில் வியர்க்குரு தொல்லையால் அவதிப்படுபவர்கள் பனை நுங்கை சாப்பிடுவதோடு, வியர்க்குருவின் மேல் தடவி வருவதன்மூலமும் நிவாரணம் கிடைக்கும். இது பசியைத்தூண்டுவதோடு, குமட்டலைக் கட்டுப்படுத்தி நீர்வேட்கையைப் போக்கும் அற்புத மருந்தாக செயல்படுகிறது.
பதநீர்
பனைமரத்தில் நுங்கு பிஞ்சாக உருவாகும் முன்னர், அதை நசுக்கி வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவர். பின்னர் அதன் நுனிப்பகுதியை லேசாக அறுத்து விடுவர். இவ்வாறு தினமும் சிறிதளவு அது அறுக்கப்படும். அதில் இருந்து சொட்டு சொட்டாக ஒருவகை திரவம் வடியும். அதை மண்பானையில் சேகரிப்பார்கள். சொட்டு சொட்டாக வடியும் அந்த திரவத்தை சேகரிக்கும் பானையின் உட்புறம் சுண்ணாம்பு தடவினால் கிடைப்பது பதநீர். (அவ்வாறு சுண்ணாம்பு தடவாவிட்டால் அதன் தன்மை மாறி ‘கள்’ளாகிவிடும்.) கோடைக்காலங்களில் பிரசித்தி பெற்றது, பதநீர். வெயிலின் வெம்மையால் தவிப்போருக்கு பதநீர் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது. ஆண் பனை, பெண் பனை இரண்டில் இருந்தும் பதநீர் இறக்கப்படுகிறது. அமிலத்தன்மை ஓரளவு காணப்படும் பதநீர் சுவையாக இருக்கும். இதில் காலை பதநீரும், மாலை பதநீரும் அருந்துவதற்கு இதமாக இருக்கும். கோடைக்காலங்களில்தான் பெரும்பாலும் பதநீர் பெறப்படுகிறது. மழை மற்றும் காற்று காலங்களில் பதநீரின் தரம் குறைந்து காணப்படும்.
இயற்கை பானம்
பதநீரை வெறுமனே கோடைக்கு ஏற்ற இயற்கைக் குளிர்பானம் என்று சொல்லிவிட்டு போய்விட முடியாது. இதில் கால்சியம், சர்க்கரைச் சத்து, தயாமின், வைட்டமின் சி, புரதச்சத்து மற்றும் நிகோனிக் அமிலம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன. ஆக, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த பதநீரைக் குடிப்பதால் வயிற்றுப்புண், தொண்டைப்புண், உடல்சூடு, வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள், மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுதலை பெறலாம். 40 நாட்கள் தொடர்ந்து பதநீர் குடித்து வந்தால் மேக நோய்கள் விலகும். ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் பாடாய்ப்படுத்தி வரக்கூடிய மேக நோய்களுக்கு பதநீர் நல்லதொரு மருந்தாகிறது. இவைதவிர உடல்வீக்கம், நெஞ்செரிச்சல், பித்தம் தொடர்பான கோளாறுகள், கல்லீரல் - மண்ணீரல் வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது பதநீர். சிறுநீர் தொடர்பான நோய்களுக்கு பதநீர் நல்ல பலன் தரும்.
கால்சியம் சத்து
பதநீரில் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் கால்சியம் சத்தும் கிடைக்கிறது. இது பற்களை வலிமையாக்குகிறது. பதநீர் பல் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுப்பது, ரத்த சோகையை நீக்குவது போன்ற பணிகளைச் செய்கிறது. முற்காலங்களில் பதநீர் அருந்தி வந்த பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் தொந்தரவுகள் எதுவும் வராமல் இருந்தன. மேலும் அவர்களுக்கு மகப்பேறு காலங்களில் வரும் பிரச்னைகளை நீக்கி குழந்தை பெற்றபிறகு அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருந்தன. இதனால் தாயும், சேயும் நலமாக இருந்தனர். இதுதவிர கால்சியம் குறைபாட்டால் ஏற்படக்கூடிய மூட்டுவலி, பற்களில் ஏற்படும் பிரச்னைகள் எதுவும் அவர்களை நெருங்காமல் இருந்தன. அதன் அடிப்படையில் இந்த பதநீரை அருந்துவதன்மூலம் தாயும் சேயும் நலம் பெறலாம். பதநீரை தொடர்ந்து அருந்தி வரும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகள் நீங்கும். குறிப்பாக விந்தணுக்களில் உள்ள உயிரணுக் குறைபாட்டை சரி செய்யும். நரம்பு மண்டலம் பலம் பெறுவதோடு தலைமுடி நரைப்பது தள்ளிப்போகும்.
மற்றபடி பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றுக்கும் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன.

வெங்காயத்தாள்

வெங்காயத்தாள் மருத்துவ பயன்கள்

கொழுப்பால் உண்டாகும் இதயநோயை குறைக்கும் வெங்காயத்தாள்
சத்துக்கள்
மருத்துவ பயன்கள்
வெங்காயத்தாள் முட்டை பொரியல்
சத்துக்கள்
வைட்டமின் C, வைட்டமின் B2, வைட்டமின் A, வைட்டமின் k மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன.
மருத்துவ பயன்கள்
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.
வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது.
இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.
மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
வெங்காயத்தாளில் உள்ள க்யூயர்சிடின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஹிஸ்டமின் எதிர்ப்பு (திசுநீர் தேக்கி எதிர்ப்பு) போன்ற நன்மைகளை வழங்குகிறது.
இது கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு உதவும் வகையில் ஒரு நல்ல காய்கறியாக இருக்கிறது.
வெங்காயத்தாள் முட்டை பொரியல்
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.
வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
சுடுசாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். பொரியலாகவும், சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

தேங்காய்ப்பால்

தேங்காய்ப்பால்

வைட்டமின் சி, வைட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ்... இவை எல்லாம் தேங்காய்ப்பாலில் அடங்கியுள்ள சத்துகள். உடலின் உள் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் கேச ஆரோக்கியத்திற்கும் உறுதி அளிக்கும் அற்புத பானம் இது. அதன் பலன்கள் இங்கே..!

உடலுக்கு..

* தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.
* மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
* ஆன்டி ஆக்ஸிடன்ட்டான செலீனியம் உள்ளதால், தேங்காய்ப்பால் ஆர்த்தரைட்டிஸின் வீரியத்தைக் குறைக்கும்.
* பேக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்ப்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும்  பேக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கேசத்திற்கு..

* வறண்ட, உடைந்த, நுனி பிளந்த கேசத்திற்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற, தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மஸாஜ் கொடுத்து, 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

* தேங்காய்ப்பால், ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து ‘ஹெட் பாத்’ எடுக்க, கூந்தல் மினுங்கும்.

சருமத்திற்கு..
* வறண்ட, போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

* வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத் தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க, காப்பர் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய்ப்பாலை சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வர, இளமைப் பொலிவு கிடைக்கும்.

* சரும எரிச்சல், சோரியாசிஸ், பேக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு, தேய்காய்ப்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ, நிவாரணம் கிடைக்கும். 
🥛 எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால்.
தேங்காயை உணவில் நேரடியாக பயன்படுத்தாமல்,அதைப் பால் எடுத்துப் பயன்படுத்துவதன் மூலம் நிறைய நோய்களைக் குணப்படுத்த முடியும்.
🥛 இது உடல் சூட்டைக்குறைத்து ஒல்லியாவர்களைச் சற்று பூசினாற் போல பள பளப் பாக மாற்றுவது இதன் தனித்தன்மை,வாய்ப்புண்,வயிற்றுப்புண்களை குணப்படுத்துவதோடு மூளை வளர்ச்சிக்கும் இது பயன்படுகிறது.
🥛 பாஸ்பரஸ்,மாங்கனீஸ்,வைட்டமின்சி,இ, பி1,பி3,பி5,பி6 மற்றும் இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், தாமிரம் போன்ற பல சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது ஒரு அற்புத பானம்.
ரத்தஅழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
வயிற்றினுள் பெருண்குடலின் வறட்சித் தன்மையப் போக்கி மலச்சிக்கலை நீக்கும்.
🥛 ஒரு கப் தேங்காய்ப் பாலில் நமக்குத் தினமும் தினமும் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25% கிடைத்து விடுகிறது.
🥛 சரும நோய்களைத் தீர்க்கும். வறண்ட சருமத்தை வளமாக்கும்.
🥛 இளமைப் பொலிவை அதிகரிக்கும்.
🥛 கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
🥛 ரத்த சோகை போன்ற நோய்களையும் தடுத்து விடும்.
🥛 பசியை அடக்கும் ஆற்றல் இருப்பதால்,இதைப் பருகி,உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.
🥛 செலினியம் அதிகம் இருப்பதால் கீல்வாதம்,முடக்கு வாதம் போன்றவற்றைத் தடுக்கிறது.
🥛 பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும்.
🥛 வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி,இருமல் போன்ற தொல்லைகளை நீக்கும்.
🥛 இதில் உள்ள பாஸ்பரஸ் எலும்புகளை உறுதியாக்கும். பாஸ்பரஸ் இருப்பதால் மென்மையான எலும்புகள் கொண்ட முதியவர்கள், குழந்தைகளுக்கு இதை தடவி சூரிய குளியல் ஆடச் செய்யலாம்.
🥛 இது எலும்பை கடினமாக்கி வலிமையைத் தரும்.
எலும்புபுரை,எலும்பு வளைதல் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களைச் சரி செய்யும் ஆற்றலும் உண்டு.
🥛 உடலில் உள்ள அமிலத்தன்மை நீக்கும் இந்த சர்வரோக நிவாரணியான தேங்காய்ப் பால் உபயோகித்து பல நன்மைகள் அடைவோம்.
மூல நோய் வராமல் பாதுகாக்கும்.

காய்கறி பேஸ் பேக்

காய்கறி பேஸ் பேக்

பொலிவிழந்த சருமத்தை பளிச்சென்று பிரகாசமாகவும், வெள்ளையாகவும் காண்பிக்க, இதை செய்து பாருங்க!*
முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கிறதா, அப்படியானால் பொலிவிழந்து காணப்படும் முகத்தை பளிச்சென்று பிரகாசமாகவும், வெள்ளையாகவும் காண்பிக்க, சரும நிறத்தை அதிகரிக்க உதவும் காய்கறி பேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
*உருளைக்கிழங்கு பேஸ் பேக்*
சில துண்டுகள் உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.பின் அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், உங்கள் முகப் பொலிவு அதிகரிக்கும்.
*கேரட் பேஸ் பேக்*
2 டீஸ்பூன் கேரட் ஜூஸ் உடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தாலே முகம் பிரகாசமாக காணப்படும்.
*தக்காளி மாஸ்க்*
தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.பின் 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தாலே, முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.

Tuesday 17 April 2018

நூக்கல்

நூக்கல்

நூக்கல் என்று அழைக்கப்படும் இந்தக் காய் வெள்ளை கலந்த பச்சை நிறத்தில் உருண்டையாக இருக்கும். இது குளிர்பிரதேசத்தில் வளரக் கூடிய ஒருவகை காயாகும். இதில் உயிர்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்பும் நிறைந்துள்ளது.

இதில் வெஜிடபிள் சூப் செய்யவும் வெஜிடபிள் பிரியாணி செய்யவும் பெருமளவு இந்த காயை பயன்படுத்துவர். நூக்கல் சற்று கடினமான காயாகும் எனவே நன்கு வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதனை நூற்கோல் என்றும் அழைப்பதுண்டு.

இதில் வைட்டமின்களும் புரத சத்தும் நிறைந்துள்ளது. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். முற்றிய நூக்கலை வாங்குவதை விட பிஞ்சு நூக்கலை வாங்குவதே சிறந்தது.

குழந்தை பெற்ற பெண்கள் இந்த பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது. ஜீரண சக்தியை ஏற்படுத்தும், நரம்புகளை வலுப்படுத்தும், குடல் நாளங்களை உறுதிப்படுத்தும். எலும்புகளை உறுதியாக்கும்.

  • குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நு}க்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
  • இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது.
  • ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும்.
  • குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் எலும்புகளை உறுதியாக்கும்.
  • நூக்கல் காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது.
  • நூக்கல் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை பெருக்கும்.

Monday 16 April 2018

கொத்தவரங்காய்

கொத்தவரங்காய்

கொத்துக் கொத்தாய்க் காய்க்கக்கூடியது என்பதாலேயே கொத்தவரை என்று இதற்குப் பெயர் வந்தது. கொஞ்சம் இனிப்புச்சுவை கொண்ட காய் என்பதால் சீனி அவரை என்றும் சொல்வதுண்டு. இந்தியா முழுமையிலும் பரவலாகப் பயிரிடப்படும் கொத்தவரங்காய், ஆங்கிலத்தில் Cluster bean என்று அழைக்கப்படுகிறது. Cyamopsis tetragonoloba என்பது இதன் தாவரவியல் பெயர் ஆகும். ஆயுர்வேதத்தில் கோரக்‌ஷ பாலினி என்று குறிப்பிடுகிறார்கள்.

சமையலுக்கு சுவைமிக்க காயான கொத்தவரை, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. சமீபகாலமாக மேலை நாடுகளின் பல்வேறு ஆய்வுகளிலும் இதன் மருத்துவ குணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொத்தவரையிலிருந்து எடுக்கப்பட்ட பசையை, நாள் ஒன்றுக்கு 15 கிராம் அளவில் 6 வாரங்கள் கொடுத்து வந்ததில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்துள்ளதை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதேபோல், உணவுடன் தினமும் 10 கிராம் அளவு கொடுத்ததில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து வந்ததையும் ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. தினமும் உணவோடு கொத்தவரைப் பசையை சிறிதளவு உண்டு வந்த டைப்1 சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு குறைந்து வந்ததையும் ஓர் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

கொத்தவரையில் பொதிந்துள்ள மருத்துவப் பொருட்கள்

சுமார் 100 கிராம் அளவுள்ள கொத்தவரையில் சுண்ணாம்புச்சத்து 130 மி.கி., மாவுச்சத்து 11 கிராம், எரிசக்தி 16 கலோரி, நார்ச்சத்து 3 கிராம், நீர்ச்சத்து 81 கிராம், பாஸ்பரஸ் 5 மி.கி., புரதச்சத்து 3 கிராம், இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் தலா ஒரு கிராம் அடங்கியுள்ளது. கொத்தவரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஃபோலேட்ஸ் ஆகிய சத்துகள் மிகுதியாக அடங்கியுள்ளன. இதில் வைட்டமின் சி சத்து பற்களையும், எலும்பு
களையும் பலமுடையதாகச் செய்ய துணை புரிகிறது. இதில் அடங்கியுள்ள வைட்டமின் கே சத்து கர்ப்பிணிகளின் வயிற்றில் உதித்து வளர்ந்து வரும் கரு சீராகவும் வலுவாகவும் வளர வகை செய்கிறது.

கொத்தவரையில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாகிறது. மேலும் பேதியை நிறுத்தவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் பெரிதும் உதவி செய்கிறது. உடலின் உள்ளுறுப்புகள் சீராக இயங்கவும் இதன் நார்ச்சத்து உபயோகமாக உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை நார்ச்சத்து குறைப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து மாரடைப்பு வராத வண்ணம் காக்கிறது. கொத்தவரையில் நிறைந்திருக்கும் மாவுச்சத்தும், புரதச்சத்தும் உடலுக்குத் தேவையான எரிசக்தியைத் தந்து உடல் இயக்கத்துக்கு துணை செய்கிறது. உடல் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு எடையைக் குறைக்க உதவி புரிவதாகவும் விளங்குகிறது.

கொத்தவரை தீர்க்கும் நோய்கள்

Glyconutrient என்னும் மருத்துவ வேதிப்பொருள் கொத்தவரையில் மிகுதியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த கிளைகோ நியூட்ரியன்ட் பெரிதும் உதவுகிறது. கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை. கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும், கிருமி நாசினியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டுவலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைப்பானாகவும், புண்களை ஆற்றியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் தன்மைகளைப் பெற்றுள்ளன. சுண்ணாம்புச்சத்து மிகுதியாக இருப்பதால் எலும்புகள் நன்கு பலப்படும். இதனால் எலும்புகளின் தேய்மானம், மூட்டுவலி ஆகிய பிரச்னைகளுக்கு கொத்தவரை சிறந்த தீர்வாகிறது என்று சொல்லலாம்.

கொத்தவரை இதய ஆரோக்கியத்துக்கும் இன்றியமையாத உணவாக விளங்குகிறது. ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. கொத்தவரையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட்ஸ் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க வல்லவை. கொத்தவரையில் உள்ள சத்துகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லவை ஆகும். சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்துகளைக் குணப்படுத்தும் தன்மையை கொத்தவரை உள்ளடக்கியுள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும். கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்குத் தேவையான இரும்புச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் கொத்தவரையில் மிகுதியாக உள்ளன. மேலும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலத்தையும் கொத்தவரை பெற்றுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துகள் தேவைப்படுகின்றன. மேலும் கொத்தவரையில் உள்ள வைட்டமின் கே சத்தும் குழந்தையின் 
வளர்ச்சிக்கும் அதன் எலும்புகளின் வலிமைக்கும் மிக்க துணையாக விளங்குகிறது. கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது. 

கொத்தவரையில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியாகப் பயன்படுகிறது. மேலும் பிராண வாயுவைக் கடத்திச் செல்லும் மருத்துவ வேதிப் பொருட்களை உள்ளடக்கியுள்ளதால் ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற உதவுகிறது. கொத்தவரை செரிமானத்துக்கு மிகவும் உதவியாக விளங்குகிறது. இதில் இருக்கும் Laxatin வேதிப்பொருள் ஜீரணப் பாதையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் இரைப்பையில் தங்கிப் புற்றுநோய் வரு
வதற்குக் காரணமாக இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. மூளையில் ஏற்படும் அழற்சியைத் தவிர்க்க கொத்தவரை மருத்துவ உணவாகிப் பயன்தருகிறது. ரத்தத்தில் கலந்து துன்பம் செய்யும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை கொத்தவரைக்கு இருப்பதால் மத்திய நரம்பு மண்டலத்துக்கு புத்துயிர் தருவதாக விளங்குகிறது. 

மேலும் இச்சத்துகள் மனஉளைச்சல் மற்றும் இதய படபடப்பு ஆகியவற்றைப் போக்க உதவி செய்து மனிதனுக்கு அமைதி தரவல்லதாகவும் விளங்குகிறது.
கொத்தவரை மருந்தாகும் விதம் கொத்தவரையின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய் தணிகிறது. கொத்தவரை இலைகள் கைப்பிடி எடுத்து அதனுடன் சிறிது கறிவேப்பிலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகிய இலைகளைச் சேர்த்து நீராக்கிக் குடிப்பதால் இரவு நேரப் பார்வைக் குறைபாடு விரைவில் நீக்கப் பெறுகிறது. கொத்தவரை விதைகளைச் சேகரித்து சுமார் 10 கிராம் அளவு எடுத்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குடிப்பதால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள், வலிகள் விரைவில் குறைந்து நிம்மதி ஏற்படுகிறது.

கொத்தவரை இலை, காய், விதை, வேர் ஆகியவற்றை சேர்த்து கைப்பிடி அளவு எடுத்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து இனிப்போ, உவர்ப்போ சேர்த்துக் குடித்து வருவதால் உடலில் தங்கிய பித்த கப தோஷங்களை வெளியேற்றி உடலுக்கு நல்ல சுறுசுறுப்பையும் விரைவான இயக்கத்தையும் தருவதாக உள்ளது.
கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெறுகிறது. இதய அடைப்பு தடைபடுகிறது. சர்க்கரை நோயை தணிக்கிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. உணவுப்பாதை மற்றும் ஆசனவாய்ப் புற்றுநோயையும் தவிர்க்கும் வல்லமை கொத்தவரங்காய்க்கு உண்டு. பலன் தெரியாமலேயே பயன்படுத்தி வந்த கொத்தவரையை, இனி பரிபூரணமாக உணர்ந்து பயன்படுத்துவோம்.

பீன்ஸ்

பீன்ஸ்



காய்கறிகளில் விலை மலிவாக கிடைக்கும் ஒரு காய் தான் பீன்ஸ். ஆகவே பலர் அடிக்கடி பீன்ஸ் பொரியல் செய்வார்கள். இப்படி அடிக்கடி இந்த காய்கறியை செய்வதால், பலர் மிகவும் கோபப்பட்டு சாப்பிட மறுப்பார்கள். ஆனால் இப்படி சாப்பிட மறுப்பதால், அந்த பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்களைத் தான் இழக்கிறோம். அதிலும் இன்றைய கால தலைமுறையினர்கள், காய்கறிகளை சரியாக சாப்பிடாமல், ஜங்க் உணவுகளை மட்டும் அதிகம் உட்கொள்வதால், அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இதன் மூலம் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர்.

உண்மையில், விலை மலிவாக கிடைக்கும் பீன்ஸில் நிறைய நன்மைகள் உள்ளன. அந்த நன்மைகளைப் பற்றி தெரிந்தால், நிச்சயம் பீன்ஸை சாப்பிடாமல் இருக்கமாட்டீர்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, பீன்ஸை சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய நன்மைகளை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!! பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் புற்றுநோயைத் தடுக்கும் பீன்ஸ் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால், அது இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும். 

இதயத்திற்கு சிறந்தது பீன்ஸில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் தடுக்கும். எடை குறைய உதவும் கொழுப்பு குறைவாக உள்ள பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் வளமாக இருப்பதால், இது உடல் எடையை குறைக்கவும், சீராக பராமரிக்கவும் உதவும். எப்படியெனில் இதனை சாப்பிடுவதால், இதில் உள்ள புரோட்டீன், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும். மேலும் பீன்ஸ் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிடலாம் சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால் அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால், தானியங்களால் கிடைக்கக்கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம். எலும்புகளை வலுவாக்கும் பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து, எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மற்ற காய்கறிகளை விட, இந்த காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும். முதுமையை எதிர்த்துப் போராடும் பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுகளான லுடீன், நியோசாந்தைன், பீட்டா கரோட்டீன் மற்றும் வியோலாசாந்தைன், சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும். முடி உடைதலைத் தடுக்கும் உடலில் பயோடின் குறைபாடு இருந்தால் தான், முடி உடைய ஆரம்பிக்கும். இத்தகைய பயோடின் பீன்ஸில் உள்ளதால், இதனை உட்கொண்டால், முடி உடைவதைத் தடுக்கலாம்.

பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோ‌ய் வருவதற்கான  வாய்ப்பைத் தடுக்கும்.

வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.  பீன்ஸ் சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக்கி, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
 
100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத்  தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்தும் தன்மை பீன்ஸ்க்கு உண்டு என்று அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில்  அதில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக கரைவதால் அது இரத்த‌த்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதை‌த் தடுக்கும்.
 
பின்ஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டின், நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்களான பொட்டாசியம், ஃபோலேட், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனி‌ஷ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் இருப்பதால், இது  உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை‌த் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதயத்திற்கு  சிறந்தது.
 
பீன்ஸில் உள்ள சிலிகான் என்னும் கனிமச்சத்து எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மற்ற காய்கறிகளை விட இந்த காய்கறியில் உள்ள சிலிகான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.
 
சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுடனால் அலர்ஜி ஏற்படலாம். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிட்டால், தானியங்களால் கிடைக்கக் கூடிய சத்துக்களை பீன்ஸ் மூலம் பெறலாம்.
 
பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுக‌ள் சருமத்தின் தரத்தை அதிகரித்து, முதுமையை எதிர்த்துப் போராடும்.